Monday, April 12, 2010

(1995 ல் எழுதியது)

என் அழகிய
தோட்டத்துப் பூக்களே
வாசங்களை
வைத்திருங்கள்

மொட்டை மாடி
வெண் நிலவே
நட்சத்திரங்களை
நிறுத்தி வை

மாலை நேரத்தில் பாடி
மனம் மயக்கும்
பறவைகளே
காத்திருங்கள்

என் காதலி வருகிறாள்...!

No comments: